சமீபத்தில் எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் “விவாதங்கள் விமர்சனங்கள்” (முதல் பாதிப்பு 1985) என்ற புத்தகத்தை படித்து முடித்தேன். அந்த புத்தகக்கத்தில் பல தரப்பட்ட விஷயங்கள் இருந்தன. திரு சுஜாதா பிற பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், பிரபலங்களுடன் (திரு கமலஹாசன் – நடிகர், திரு சிவகுமார் – நடிகர், திருமதி சுஜாதா – நடிகை) நடத்திய உரையாடல்கள், திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு திரு சுஜாதா எழுதிய விமரிசனங்கள் ஆகியவை எல்லாம் அந்த புத்தகத்தில் உள்ளடக்கி இருந்தன. அதில் ஒரு விமரிசனத்தை பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இனி சுஜாதா வரிகளில்
