இந்த படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் என் மனதில் எழுந்த முதல் கேள்வி ஏன் இந்த படத்திற்கு மூன்று என பெயர் வைத்தார்கள் என்பது! ஒருவேளை ரசிகர்கள் அனைவரும் தங்களது உயிரை பணயம் வைத்து மூன்று மணி நேரம் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்ததை பாராட்டும் நோக்கில் வைத்திருக்கலாம் என்று நானே என் மனதை தேற்றிக்கொண்டேன். இதைப் படித்தவுடனேயே படம் எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்னும் உங்களுக்குப் படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் மேலே படியுங்கள்.

